அல் குர்ஆன்
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி "அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே! என்று நூஹ் கூறினார்.
அல் குர்ஆன்
"இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்!
அல் குர்ஆன்
நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!'' என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.
அல் குர்ஆன்
"ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை'' என்று அவர் கூறினார். அவ்விருவருக் கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.
அல் குர்ஆன்
"என் சமுதாயமே! இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. என்னைப் படைத்தவனிடமே எனக்குரிய கூலி உள்ளது. விளங்க மாட்டீர்களா?
Monday, 25 April 2011
அறிவியல் சான்று - 1
1. அறிவியல் சான்று - 1. கடல்களுக்கு இடையே திரை
2. அறிவியல் சான்று - 2. வேதனையை உணரும் தோல்கள்
3. அறிவியல் சான்று - 3. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை
3. அறிவியல் சான்று
3. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை

அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை
பொதுவாக மனித உடலுக்கு என சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது அவற்றுள் ஒன்றாகும். இதற்கு உதாரணமாக கண்களைக் குறிப்பிடலாம். கண்களில் ஏதேனும் தூசுகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே முயற்சிக்கும்.
அன்னியப் பொருளைக் கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கும் இது வரை விடையில்லை.
மனிதனுக்கேற்ற மார்க்கம்

நூலின் பெயர் : மனிதனுக்கேற்ற மார்க்கம்
ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்இது தான் பைபிள்
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
இயேசு இறை மகனா?
Saturday, 23 April 2011
இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?
- அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.இ.
Sunday, 17 April 2011
கிறிஸ்துவ தீவிரவாதம்
நாகாலாந்து கிறிஸ்துவ தீவிரவாத குழுக்களிடையே போர்
தற்போது இந்த இரண்டு குழுக்களும் அடித்துகொள்வது நாகாலாந்து மக்களுக்கு மிகுந்த பிரச்னையை உண்டுபண்ணியிருக்கிறது.
இந்து தீவிரவாதம்
இந்து தீவிரவாதம் - சுவாமி அசிமானந்தர் வாக்குமூலம்

இதுவரை தீவிரவாதம் என்றாலே, அது இஸ்லாமியர்களுக்கான ஒன்று என்று நாம் நினைத்து கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய அறியாமை என்பது சுவாமி அசிமானந்தா அவர்களின் வாக்குமூலத்தில் இருந்து விளங்கும்.
"120க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் பலி வாங்கிய ஆறு குண்டுவெடிப்புகளுக்கு இந்து தேசியவாதிகள்தாம் பொறுப்பு " என்று முதல் முறையாக இந்து தீவிரவாதம் பற்றி வெளிப்படையாக அறிவித்தவர் சங்க பரிவாரை சேர்ந்த அஸீமானந்தர். கலீம் என்கிற முஸ்லிம் நண்பரே தனது மனமாற்றத்திற்கு காரணம் என்று அவர் கூறியிருப்பது, சர்வதேச அளவில் கவனம் பெற்று உள்ளது.
இது தொடர்பான காலச்சுவடு, "த கேரவான்" இதழில் இருந்து மொழிபெயர்த்து உள்ள ஒரு கட்டுரை....
முஸ்லிம்கள் குறித்த வகைமாதிரி பிம்பங்களில் வலுவானது, அவர்கள் இயல்பிலேயே ஆவேசமானவர்கள் என்பது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக சையத் அஹமது பரேல்வியின் தலைமையில் நடை பெற்ற ஜிஹாத் இயக்கம்; தங்கள் நலன்களைக் காத்துக்கொள்ள எப்படிப் போராட வேண்டுமென முஸ்லிம்களுக்குத் தெரியும் என்று சொன்னபோது சையத் அஹமதுகானின் குரலில் ஒலித்த அச்சுறுத்தும் தொனி; கிலாஃபத் இயக்கமும் மாப்ளா கலவரமும்; 1946ஆம் ஆண்டின் ‘நேரடி நடவடிக்கை’ தினம் - இவை அனைத்தும் முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் என்னும் படிமத்தையே மீட்டுறுதி செய்தன. பலவீனர்கள் என்று இல்லாவிட்டாலும் அமைதியை விரும்புபவர்கள் என்று இந்துக்களைப் பற்றியுள்ள பிம்பத்துக்கு நேரெதிரானதாக இது அமைந்தது.
மகாத்மா காந்தியின் கூற்றை அடியொற்றி இந்த எதிரெதிர் பிம்பங்கள் துல்லியப்பட்டன. கிலாஃபத் இயக்கத்தின்போது நடந்த கலவரங்களுக்குப் பிறகு அவர், இந்து இயல்பாகவே கோழை என்றும் முஸ்லிம் இயல்பாகவே ரவுடி என்றும் கூறினார்.
காந்தியின் அகிம்சை இந்துயிசத்தோடு தொடர்புகொண்ட பகவத் கீதையிலிருந்தும் இந்துயிசத்துடன் நெருங்கிய உறவு கொண்ட சமணத்திலிருந்தும் பெறப்பட்டது.
1920களின் தொடக்கத்தில் ‘எல்லை காந்தி’ அப்துல் கஃபார் கான் செஞ்சட்டை இயக்கத்தை வட கிழக்கு மாகாணத்தில் தொடங்கியபோதிலிருந்தே முஸ்லிம் சத்யாக்கிரகிகள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனாலும் இந்துக்களை அகிம்சையோடும் முஸ்லிம்களை வன்முறையோடும் அடையாளப்படுத்தும் போக்கு தொடர்ந்தது. சைவ உணவுக்கும் அசைவ உணவுக்கும் இடையே உள்ள முரண்பாட்டுக்கும் இதற்கும் நிறையவே தொடர்பு இருந்தது.
கடந்த மாதம் ஸ்வாமி அஸீமானந்தர் அளித்த வாக்குமூலம் இந்த வகைமாதிரி பிம்பங்களைப் புரட்டிப்போட்டது. 120க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் பலி வாங்கிய ஆறு குண்டுவெடிப்புகளுக்கு இந்து தேசியவாதிகள்தாம் பொறுப்பு என்று காவி உடை தரித்த இந்தச் சங்கப் பரிவாரத் தலைவர் ஒப்புக்கொண்டார்.
இந்தத் தாக்குதல்கள் இஸ்லாமியர்கள் நிகழ்த்திய குண்டு வெடிப்புகளுக்குப் பதிலடி என்று சொல்லப்பட்டாலும் இந்தத் தீவிரவாதக் குழுவின் முக்கியப் புள்ளியான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகச் சங்கத்தின் பிரச்சாரக் (முழுநேர ஊழியர்) சுனில் ஜோஷி, 1999-2000ஆம் ஆண்டுகளிலேயே - 2001இல் இஸ்லாமியர்களின் தொடர் தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பே - வெடி குண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்.
தவிர, இஸ்லாமிய குண்டு வெடிப்புகளில் பலியான இந்துக்களின் மரணத்துக்குப் பழிவாங்குவதற்காக அதிகபட்ச உயிரிழப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஹைதராபாதின் மெக்கா மசூதி, அஜ்மீர் ஷரீஃப் தர்க்கா ஆகிய இலக்குகளைத்தான் தேர்வு செய்ததாக ஸ்வாமி அஸீமானந்தர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ‘குண்டுக்கு குண்டு’ என்னும் அவரது தத்துவம் காந்தியக் கொள்கைக்கு நேர் எதிரானது. அன்பு, பரிவு ஆகியவற்றின் மூலம் வன்முறையை அகிம்சையாக மாற்ற வேண்டும் என்றே காந்தி எப்போதும் கூறிவந்தார்.

வன்முறைக்குக் காரணமானவர்கள் - தான் உள்பட - இந்துக்கள் என்பது மட்டுமல்ல, தன் மனமாற்றத்துக்குக் காரணமானவர் ஒரு முஸ்லிம் என்பதையும் ஸ்வாமி அஸீமானந்தர் தனது வியப்பூட்டும் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அவரது வாக்குமூலத்தின் அற்புதமான முன்னுரை இவ்வாறு கூறுகிறது:
“நான் ஹைதராபாத் சஞ்சல்குடா மாவட்டச் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது என்னுடன் இருந்த கைதிகளில் ஒருவரான கலீம் என்பவரால்தான் நான் இந்த வாக்கு மூலத்தை அளிக்கிறேன். கலீமிடம் நான் பேசியபோது அவர் இதே மக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் முன்னதாகக் கைது செய்யப்பட்டவர் என்பது தெரிந்தது. அவர் இந்த வழக்குக்காக ஒன்றரை ஆண்டுக்காலம் சிறையில் இருந்திருக்கிறார். சிறையில் கலீம் எனக்கு நிறைய உதவிகள் செய்தார். எனக்கு உணவும் தண்ணீரும் எடுத்து வந்து தருவார். அவருடைய நன்னடத்தை என் மனத்தைத் தொட்டது. செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்; இந்த வழக்கில் நிரபராதிகள் பாதிக்கப்படாமல், உண்மையான குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் ஒப்புதல் வாக்குமூலம் அளி என்று என் மனசாட்சி என்னிடம் சொன்னது”.
உளவியல்ரீதியான இந்த மாற்றம், ஆன்ம சக்தியால் மாற்றத்தை ஏற்படுத்துவது என்று காந்தி குறிப்பிட்டதைப் பிரதிபலிக்கிறது.
அதிகாரத்தின் மூலமாகவோ அச்சுறுத்தலின் மூலமாகவோ அல்லாமல் தனிப்பட்ட முறையில் ஆழமான மாற்றத்தை ஏற்படச் செய்வதன் மூலம் தன் எதிராளிகளின் போக்கை மாற்ற வேண்டுமென அவர் விரும்பினார். தன் உரிமைகளைப் பிறரை மதிக்கவைக்கத் தன் உடல்பலத்தைக் கலீமால் பயன்படுத்த முடியாத நிலையில்தான் அவர் அப்படி நடந்துகொண்டார் என்று வாதிடலாம்.
ஆனால் காந்தியின் அகிம்சையை இந்தியா ஏற்றுக்கொண்டதும் அப்படித்தான். ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயர்களை விரட்ட முடியாத நிலையில்தான் இந்தியா இருந்தது. ஆங்கிலேயர்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்கி அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்வதற்கான உத்தியாகவே அகிம்சை இருந்தது என்று நேரு சுதந்திரத்துக்குப் பிறகு ஒப்புக்கொண்டார்.
குண்டுவெடிப்புகளால் எந்த நன்மையும் விளையாது; மாறாக மேலதிகப் பாரபட்சங்களுக்கும் துயரங்களுக்கும் அவை வழிவகுக்கும் என்று கருதும் முஸ்லிம்கள், தங்களது பாதுகாப்பு, மரியாதை ஆகிய அதே காரணங்களுக்காக அகிம்சையை நோக்கித் திரும்பலாம். கடந்த சில வாரங்களில் கலீம், முஸ்லிம்களின் சில பிரிவினரால் மகத்தான மனிதராக ஆராதிக்கப்பட்டார்.
குவாமி அவாஸ் இதழின் முன்னாள் ஆசிரியரும் சிவில் உரிமைக்கான மையத்தின் பொதுச் செயலாளருமான சயீது மன்சூர் ஆக்ரா, மோடியைப் புகழ்ந்து மௌலானா குலாம் முகம்மது வஸ்தான்வி பேசியதை ஆதரித்து இவ்வாறு எழுதினார்:
“மோடி விஷயத்தில் பெரிய நம்பிக்கை ஏதும் எங்களுக்கு இல்லை. இருக்கவும் கூடாது. அதே சமயத்தில், அல்லாவின் கருணையையும் ஞானத்தையும் தவறாகப் புரிந்துகொள்வது இஸ்லாத்துக்குப் புறம்பானவர்களின் (காஃபிர்) போக்குக்கு இணையானது. அல்லாவின் கருணை வற்றிவிடவில்லை என்பதை நாம் தீவிரமாக நம்புகிறோம்.
ஸ்வாமி அஸீமானந்தரின் மன சாட்சியை அல்லா விழிப்படையச் செய்த விதத்தை நாம் பார்த்தோம். அஸீமானந்தர் செய்த தவறுகளை நன்கு அறிந்திருந்தபோதிலும் கலீம் அவரிடம் நடந்துகொண்ட விதம் பின்பற்றத்தகுந்த ஒரு சிறப்பான முன்னுதாரணம். அதேபோல மோடி மற்றும் அவரது தோழர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பக்கூடிய இன்னொரு கலீமை அனுப்பும்படி நாம் அல்லாவிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்”.
கருணை உள்ளம்கொண்ட முஸ்லிம்களால் மோடியின் மனத்தை மாற்றிவிட முடியும் என்று நம்புவது அணுகுண்டைத் தாங்கிச் செல்லும் விமான ஓட்டியின் மனத்தைத் தன்னால் மாற்றிவிட முடியுமென்ற காந்தியின் நம்பிக்கையைப் போலவே ஒரு லட்சியக் கனவுதான்.
ஜே. எஸ். பண்டூக்வாலா என்னும் குஜராத் முஸ்லிம்தான் இத்தகைய வாதத்தை முதன்முதலில் முன்வைத்தார். இவர் குஜராத் மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். 2002இல் பரோடாவில் நடந்த கொலை வெறித் தாக்குதலில் மயிரிழையில் பிழைத்தவர். ஹர்ஷ் மந்தர் எழுதிய ஃபியர் அண்ட் ஃபர்கிவ் னெஸ் (அச்சமும் மன்னிப்பும்) என்னும் நூலுக்கு அவுட்லுக் இதழில் 2009இல் அவர் எழுதிய மதிப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்: “மன்னிப்பு, 2002இல் நடந்த மாபெரும் சோகத்தால் இந்துயிசத்திற்கு ஏற்பட்ட இழப்புக் குறித்து குஜராத்திலும் நாட்டின் இதர பகுதிகளிலும் உள்ள இந்துக்களின் மனசாட்சியையும் விழிப்புறச் செய்யலாம்.”
ஆதிக்கம் செய்பவர் குற்றவுணர்ச்சி கொள்ளக்கூடியவராக இருக்கும்போதுதான் அகிம்சைக்குப் பலன் இருக்கும். ஆங்கிலேயர்களும் சரி, தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் யுகத்தைச் சேர்ந்தவரும் மேற்கத்திய மனிதாபிமானக் கோட்பாடுகளிலிருந்து சில அம்சங்களை வரித்துக்கொண்ட அதிபர் ஃப்ரெட்ரிக் மில்லியம் டெ கிளர்க்கும் சரி, செய்த தவறுக்கு வருந்தும் இயல்பைக்கொண்டிருந்தனர்.
தலாய்லாமா விஷயத்தில் சீன அரசுக்கு அப்படிப்பட்ட உணர்வு எதுவும் இல்லை. கருத்தியல்ரீதியான ‘நல்ல’ காரணங்களின் அடிப்படையில் திபெத்தியர்களுக் கெதிரான தங்கள் வன்முறையை அவர்களால் நியாயப்படுத்த முடியுமென்பது காரணமாக இருக்கலாம்.
இந்தியா விஷயத்தில் எப்படி? அகிம்சைக் கோட்பாடு முஸ்லிம்களின் நடத்தையில் முக்கிய இடம்பிடித்தால் அதற்கு இந்து தேசியவாதிகள் - அல்லது தீவிரப் போக்கற்ற இந்துக்கள் - இணக்கமான முறையில் எதிர்வினை ஆற்றுவார்களா? முஸ்லிம்களுடன் சண்டையிடுவதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு (கருத்தியல்ரீதியான) ‘நல்ல’ காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் வெறுப்பு அரசியல், முஸ்லிம் பண்பாடு குறித்த எல்லா விதமான மரியாதையையும் - ஏன் அதன் இருப்பையும்கூட - சாத்தியமற்ற தாக்கிவிடுமா? காலம் பதில் சொல்லும்.
இந்துத்துவா
பார்ப்பனர்கள் வெளிப்படையாக நாங்கள் தான் அரசாளத் தகுந்தவர்கள் என்று மார்தட்டினால், மார்பும் இருக்காது, மண்டையும் இருக்காது.
அதற்காக அவர்கள் திசை திருப்பும் யுக்திதான் முஸ்லிம்கள் எதிர்ப்பு முஸ்லிம் தீவிரவாதம் என்ற பூச்சாண்டி!
இந்தியாவில் புலனாய்வுத் துறை இருக்கிறது. நிருவாக வர்க்கம் இருக்கிறது.
இவற்றை எல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ஒரு நூல்தான் who Killed Karkare?.
நூலின் ஆசிரியர் மகாராட்டிர மாநிலத்தின் முன்னாள் அய்.ஜி. காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் அய்.பி.எஸ்.
ஓய்வு பெற இன்னும் பல ஆண்டுகள் இருந்தும், இதற்குமேல் பெரும் பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தும், அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தானாகவே முன்வந்து விருப்ப ஓய்வு (VRS) கொடுத்துவிட்டு, பார்ப்பனப் பாசிசக் கும்பலால் திட்டமிட்ட வகையில் பலியாக்கப்படும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வீர சாகச பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.
மாலேகான் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த ஒரு சதிகார கும்பலின் சிண்டைப் பிடித்து இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்தியவர் கர்கரே என்னும் காவல்துறை அதிகாரியாவார்.
மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாலேகான் என்னும் இடத்தில் சிமி அலுவலகத்தின்முன் குண்டுவெடிப்பு 29.9.2008 அன்று நிகழ்ந்தது. 5 பேர் பலி; 90 பேர் படுகாயம்.மோட்டர் பைக்கில் டைமர் கருவி பொருத்-தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. அந்த மோட்டர் காருக்கு உரிமையானவர் ஒரு பெண் சந்நியாசி. அவர் பெயர் சாத்வி பிரக்யா தாக்கூர். மாணவர் பருவந்தொட்டு பல்வேறு இந்துத்துவா அமைப்பில் இருந்தவர்.
குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கின் ஆதரவும் உண்டு.
இந்தக் குண்டுவெடிப்பில் முதல் குற்றவாளி இராணுவத்தில் புலனாய்வுத் துறையில் பணியாற்றிய சிறீகாந்த் புரோகித் என்பவர்; மகாராட்டிர மாநிலம் நாசிக் என்னும் இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருபவர்.
வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? கையாளுவது எவ்வாறு? என்பன போன்ற பயிற்சிகளை இந்துத்துவாவாதிகளுக்கு அளிக்கும் இராணுவ அதிகாரி இவர்.
பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்தை இந்து மயமாக்கும் ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டது.
விமானப்படைத் தளபதியாக இருந்து விடுபட்ட விஷ்ணுபகவத் இந்த உண்மையைப் பட்டாங்கமாய்ப் போட்டு உடைத்தார்; ஊடகங்களிலும் வெளிவந்தது.
நாசிக் இராணுவத்தில் பயிற்சி பெற்ற இந்துத்துவாவாதிகள் இந்திய இராணுவத் துறையில் ஆயிரக்கணக்கானோர் ஊடுருவியுள்ளனர் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய, அதிரும் தகவலாகும்.
இந்தியாவை இந்து மயமாக்கு!, இந்திய இராணு-வத்தையும் இந்து மயமாக்கு! என்பது இந்துத்துவாவாதிகளின் ஏற்றப் பாட்டாகும்.
அவர்கள் அதிகாரத்தில் இருந்த நேரத்தில், அத-னைத் திட்டமிட்டுச் செய்துவிட்டனர். இராணுவத்-திலிருந்து ஓய்வு பெற்ற 96 உயர்மட்ட அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவ அதிகாரிகள் அழைக்கப்பட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்ளவேண்டும்.
மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.
மாலேகானில் மட்டுமல்ல; பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் அரங்கேற்றப்பட்ட குண்டுவெடிப்புகளிலும் இதே கும்பலுக்குத் தொடர்பு உண்டு என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது.
இராணுவ அதிகாரி புரோகித் தயாரித்து வைத்திருந்த திட்டமோ வெகு பயங்கரமானது. இசுரேலில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து இந்தியாவில் ஒரு போட்டி அரசை, இந்துத்துவா அரசை நடத்திடவெல்லாம் திட்டமிட்டு இருந்தனர். வரைபடம், அரசமைப்புச் சட்டம், கொடி முதலியவை முதற்கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.
மடிக் கணினி (லேப்டாப்)யில் இருந்த பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்தன.இவற்றையெல்லாம் கண்டுபிடித்தவர், விரிவாகக் குற்றப்பத்திரிகை தயாரிக்கக் காரணமாக இருந்தவர்தான் கார்கரே என்னும் காவல்துறை அதிகாரி.
4000 பக்கங்களைக் கொண்ட தகவல் அறிக்கை-யாக அது உருவாக்கப்பட்டு இருந்தது.அவை வெளியில் வந்தால் ஆரிய ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பூர்வோத்திரமான அத்தனை அங்க மச்ச அடையாளங்கள் எல்லாம் பளிச் பளிச்சென்று மக்கள் மத்தியிலே அம்பலமாகியிருக்கும்.
இப்படிப்பட்ட ஓர் அதிகாரியை ஆரியம் விட்டு வைக்குமா? இதற்குமுன் விட்டு வைத்ததுதான் உண்டா?
ராமராஜ்ஜியத்தை உருவாக்குவேன் என்று சொன்னவரை மகாத்மாவாக்கியவர்களும் அவர்களே. நான் சொல்லும் ராமன் வேறு; இராமாயண இராமன் வேறு என்று காந்தியார் சொல்ல ஆரம்பித்ததும், அவரை துர் ஆத்மாவாகக் கருதி மார்பில் குண்டு பாய்ச்சி ரத்தம் குடித்த கும்பலாயிற்றே!
திட்டமிட்டார்கள், தீர்த்துக் கட்டிவிட்டார்கள் காவல்துறை அதிகாரி கர்கரேயை.
அதைப்பற்றிய நூல்தான் மகாராட்டிர மாநில முன்னாள் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்களால் எழுதப்பட்ட ‘‘Who Killed Karkare?’’ என்ற நூலாகும். 2009 இல் முதல் பதிப்பாக வெளி-வந்து, 2010 இல் மூன்றாவது பதிப்பாகவும் வெளிவந்துவிட்டது.
அந்த நூலைப் பற்றிய அறிமுக விழாதான் திராவிடர் கழகத்தின் சார்பிலும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலும் (2.2.2010) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றதாகும்.
336 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 300.
குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரி அவர்கள் கூட அண்மையில் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்." உளவுத் துறை என்பது யார் ஒருவருக்காவது பதில் சொல்லக் கடமைப்பட்டதாக (Accountability) இருக்கவேண்டும் " என்று கூறியிருப்பது இந்நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நூலுக்குப் பிறகுதான் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருந்த பாலக்காட்டுப் பார்ப்பனரான எம்.கே. நாராயணனும் அந்தப் பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா முழுமையும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை முஸ்லிம்கள் சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டும். முஸ்லிம்கள் முஷ்ரிஃப் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்த-போதே 1925 ஆம் ஆண்டில் சேலத்தில் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில் தொலைநோக்கோடு ஒரு கருத்தைக் கூறியுள்ளார். வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருந்த ம் போதே பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவை ஏற்படுத்தவேண்டும். இல்லாவிட்டால், இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனர்களின் வல்லாண்மைக் கொடுமையின்கீழ் துன்பப்பட நேரிடும் என்று எச்சரித்தார்.
அதுதான் இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது.
முஷ்ரிப் அவர்களால் எழுதப்பட்ட இந்த நூல் அறிவுப்பூர்வமான வெடிகுண்டாகும். இந்த நூல் வெளிவந்த பின் இந்தியாவின் ரா, அய்.பி. போன்ற அமைப்புகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.
இங்கு இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவராக இருந்தவர் கரண் சிங். ஏன் அவர் அந்த அமைப்பிலிருந்து விலகினார்? அதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறாரே.
அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மத்தைக் கொண்டு வர விரும்புகிறார்கள் என்று சொல்லித்தானே கரண்சிங் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார்.
கர்கரேயை அவர்கள் கொல்லவில்லை, உண்மையை, நீதியைக் கொன்று இருக்கிறார்கள்.
மாந்திரிகம்
சரி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் நடமாடும் மாந்திரவாதிகள். இரண்டாவது எதிர்காலத்தை சொல்கிறேன், நல்லது, கெட்டதை கணித்து உங்களது வாழ்க்கையை வளபடுத்துகிறேன் என்று கூறும் ஜோதிடர்கள், நாடி ஜோதிடம் முதல் பல்வேறு ஜோதிடம் வரை. மூன்றாவது சாமியார்கள் கடவுளின் பக்கம் உங்களை நேருக்குகிறேன், உங்கள் பிரச்சனைகளை கடவுளிடம் பேசி தீர்க்க உதவுகிறேன், மத போதனைகளை கற்று தருகிறேன் என்று சொல்லும் இது போன்ற நபர்களிண்டம் தான் நம் அறிவை அடகு வைக்கிறோம். இவர்கள் உங்களது பலவீனம் என்ன என்பதை உங்களிடம் பேசி தெரிந்து கொண்டு அதற்க்கு தகுந்தா போல் உங்கள் மூளையை வாஸ் செய்கிறார்கள். எனவே பெண்கள் இது போன்ற விசயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
உழைத்து சம்பாதிக்காத காஞ்சி சங்கராச்சாரியார் முதல் நித்யானந்தா சாமிகள் வரை இவர்கள் எல்லாரிடமும் மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை, எல்லாம் கொட்டி கிடைக்கும். யார் உழைத்து சம்பாதிகிறார்களோ அந்த மக்களிடம் இது போன்ற சிந்தனைகள், செயல்கள், வக்கிரங்கள் வராது. உடல் உழைப்பு இல்லாமல் ஓசியில் மக்கள் கொடுக்கும் செல்வத்தை வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் இது மாதிரிதான் செயல்படுவார்கள். இவர்களுக்கு என்ன பொண்டாட்டியா? பிள்ளைகளா? உறவினர்களா? நண்பர்களா? இவர்களுக்கு ஏதாவது சமூக பிரச்சனைகளா? பொருளாதார பிரச்சனைகளா? அரசியல் பிரச்சனைகளா? இவர்களுக்கு ஒன்றும் இல்லை. மக்களை ஏமாற்றி சம்பாதித்து சொகுசாக வாழவேண்டும் அவ்வளவு தான்.
எனவே இதுபோன்ற சாமியார்கள், ஜோதிடர்கள், குருக்கள், மந்திரவாதிகள் போன்றவர்களிடம் பெண்களே கவனமாக இருங்கள். ஆண்கள் பணத்தை மட்டும்தான் இழக்கிறார்கள் நீங்கள் கற்பையும் சேர்ந்து இழக்கவேண்டி வருகிறது. காஞ்சி சங்கராசாரி முதல் நித்யானந்தாவரை எல்லாம் போலிகளே. எதில் யாரும் விதிவிலக்கல்ல! எல்லா சாமியார்களும் பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றுபவர்கள்தான் இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.சன்யாசிகள் என்று சொல்லிகொள்ளும் எல்லாரும் அறிவியல் ரீதியாக பெய்யர்களே. மனிதனாக பிறந்த எவனும் பெண்துணை இல்லாமல் வாழ்வேன் என்று சொன்னால் அவன் ஒன்று ஆண்மை இல்லாதவனாக இருக்கவேண்டும்!! ஏதாவது பேரும் நோய் இருக்கவேண்டும்!! இல்லை இதுபோல் எமாற்றுபவனாக இருக்கவேண்டும்.














