நூலின் பெயர்: இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?ஆசிரியர் பீ.ஜைனுல் ஆபிதீன்
இந்த நூலின் ஆசிரியர் பீ. ஜைனுல் ஆபிதீன் நாடறிந்த நல்ல சிந்தனையாளர். சிறந்த மார்க்க அறிஞர் இதழாசிரியர் தமிழ் நாட்டில் மறுமலர்ச்சிக்காக உழைத்து வருபவர். அதன் பொருட்டு விமர்சனக் கணைகளுக்கு ஆளாகி வருபவர். தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் கூர் அம்புகளை அறிவுக்கேடயத்தால் தடுத்து முனை மழுங்கச் செய்வதில் வல்லவர். அந்த வல்லமையும் சாமர்த்தியமும் இந்த நூலின் எட்டு அத்தியாயங்களிலும் எதிரொளித்து, உண்மையை பிட்டு பிட்டு வைக்கிறது.
பலதார மணத்திற்கு இஸ்லாம் ஏன் அனுமதி அளித்தது? அதற்குக் காரணம் என்ன? அந்த அனுமதி இல்லாவிட்டால் நிலைமை என்ன ஆகும்? தலாக்கின் எதார்த்தம் என்ன? ஜீவனாம்சம் இஸ்லாத்தில் இல்லையா? போன்ற கேள்விகளுக்கு நூலாசிரியர் தரும் அறிவுபூர்வமான விஷயங்கள் விழிப்புருவங்களை வியப்பால் உயர்த்துகின்றன.
குறிப்பாக இந்த நூலில் உள்ள தலாக், ஜீவனாம்சம், பர்தா ஆகிய மூன்று அத்தியாயங்களும் நம் நாட்டு தேசிய நாளேடுகளும், முற்போக்குவாதிகளும், அறிவுஜீவிகளும், பெண்ணுரிமை பேசுவோரும் மண்டியிட்டு அமர்ந்து, படித்துத் தெளிய வேண்டிய அத்தியாயங்கள்!





0 comments:
Post a Comment