மறுபடியும் பாடநூல்களா? சரி! மன்னர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களின் எதிர்ப்புகள் தான் ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களை கொள்ளையடித்தவர்கள்தான். இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்கள் மீது ஜிஸ்யா வரி சுமத்தியது உண்மைதான். ஆனால் இந்த வரி இந்துக் கோவில்களை பராமரிக்க என்று சொல்லப்பட்டது. இஸ்லாமிய மக்கள்மீது வரி இல்லையென நினைத்து விடாதீர்கள். ஜகாத் என்ற பெயரில் அவர்களிடமும் வசூலிக்கப்பட்டது. ஜிஸ்யா வரியும் கூட பெண்கள், குழந்தைகள், பார்ப்பணர்களிடம் வசூலிக்கப்படவில்லை. இந்து மன்னர்கள் யூத குடியினரிடமிருந்தும் ஜிஸ்யா வசூலித்தர்கள் என்று பதினான்காம் நூற்றாண்டு பயணி ஒருவர் குறிப்பிடுகின்றார்.
ஹிஸ்யாவுக்காக பயந்துகொண்டு இந்துக்கள் மதம் மாறினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். எந்த இஸ்லாமிய மன்னரது காலத்திலும் இந்த மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப்படவில்லை. இதன் பொருள் மத மாற்றங்களே இல்லை என்பதல்ல இரண்டு வகையில் மதமாற்றங்கள் நடை பெற்றன.
1) எல்லோரும் சகோதரர்களே என்ற சூஃபி துறவிகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்து மத சாதிக் கொடுமையினால் வெறுப்புற்று அடிநிலை மக்கள் இஸ்லாத்திற்கு மாறினார்கள்.
2) அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கமாக இருந்த புதிய மன்னர்களைத் தங்கள் விசுவாசத்தால் அசத்த விரும்பியவர்களாகவும் மதம் மாறியுள்ளனர். ஆனால் அந்த நிலையிலும் சாதாரண மக்கள் கட்டாய மதம் மாற்றப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக சில சமயங்களில் சந்தேகத்திற்கிடமான சில ஜமீன்தாரர்கள் மதம் மாற்றப்பட்டிருக்கலாம்.





0 comments:
Post a Comment